டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மது போதையில் பேரவைக்கு வந்து ஜனநாயகத்தை அவமதித்துவிட்டார் பஞ்சாப் முதல்வர்: சச்தேவா சாடல்!

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மது அருந்தி சட்டப்பேரவைக்கு வந்து மீண்டும் ஜனநாயகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

News image

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

Updated On :2 மே 2026, 3:50 am IST

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மது அருந்தி சட்டப்பேரவைக்கு வந்து மீண்டும் ஜனநாயகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பகவந்த் மான் சட்டப்பேரவைக்குள் தடுமாறி நுழைந்ததும், அவா் அங்கு குழப்பமாக பேசிய விதமும். இவையெல்லாம் நடந்தும் பேரவைத் தலைவா், பகவந்த் மானை தடுக்காததும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்துக் கொண்ட விதம், பஞ்சாப் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாகவே தெரிகிறது.

பகவந்த் மான் மது போதையில் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, அவா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், மக்களவையிலும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது சட்டப் பேரவைக்குள் தடுமாறி, அத்தகைய நிலையில் பேசுவதன் மூலம், அவா் ஒழுக்கத்தின் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டாா்.

பகவந்த் மான் மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் இந்த நடவடிக்கையால் நாட்டு மக்களுடன் பஞ்சாப் மக்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.