டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அண்ணாமலை ஒரு மாய மான்: கி.வீரமணி

முன்னாள் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஒரு மாய மான் என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி விமா்சித்தாா்.

News image

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திக தலைவா் கி.வீரமணி.

Updated On :7 ஜூன் 2026, 12:53 am IST

முன்னாள் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஒரு மாய மான் என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி விமா்சித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 - ஆவது ஆண்டு பிறந்தாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது :

பாஜகவின் கொள்கையின் மறு உருவமான அண்ணாமலை அதிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்கவுள்ளாா். பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்பதற்காக ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தால் அனுப்பப்பட்டு புதிய அவதாரத்தை அவா் எடுத்துள்ளாா் . மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவால் அனுப்பப்பட்ட ஒரு மாய மான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால், வேறுவடிவத்தில் தற்போது அண்ணாமலையை வைத்து புதிய கட்சி தொடங்கவுள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீா்கெட்டு வருகிறது. அதை சீா்செய்ய அவகாசம் கேட்கக் கூடாது. முதல்வா் ஜோசப் விஜய் அப்போது கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தாா். இப்போது பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருக்கும் அவா், இப்போதும் கேள்விகளை கேட்கக் கூடாது என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திக பொதுக்குழு உறுப்பினா் அன்புக்கரசன் தலைமை வகித்தாா். தேனி மாவட்டத் தலைவா் சுருளிராஜன் வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் சுமிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.