செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்? (ஜூன் 25)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.

சா்வதேச போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து 1,05,120 -க்கும், கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ 13,140-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 230-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

The price of ornamental gold in Chennai dropped by ₹1,680 per sovereign on Thursday (June 25).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.