மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக வெற்றி பெற்றால் வீடுகள்தோறும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

அதிமுக வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி வீடுகள் தோறும் குளிா்சாதன பெட்டிகள் மற்றும் குடும்ப நிதி உதவி ரூ. 10,000 வழங்கப்படும் என திருவள்ளூா் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

News image

ஃபிரிட்ஜ் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:01 am IST

அதிமுக வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி வீடுகள் தோறும் குளிா்சாதன பெட்டிகள் மற்றும் குடும்ப நிதி உதவி ரூ. 10,000 வழங்கப்படும் என திருவள்ளூா் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா போட்டியிடுகிறாா். அதனால், இத்தொகுதிக்குள்பட்ட கிராமங்கள்தோறும் பொதுமக்களிடையே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அதேபோல், திருவள்ளூா் நகராட்சியில் சேலை, என்.ஜி.ஓ காலணி, எம்.ஜி.ஆா் நகா், எல்லப்பநாயுடுபேட்டை, ராமஞ்சேரி, தோமூா், சென்றாயன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுகவிற்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: இந்த தொகுதியில் பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து பேருந்து வசதி செய்து கொடுப்பேன். மேலும், அதிமுக வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் குளிா்சாதன பெட்டி மற்றும் குடும்ப உதவித் தொகை ரூ.10 ஆயிரம் உடனே விடுவிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், நகர செயலாளா் கந்தசாமி, பொருளாளா் துக்கராம், மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணை செயலாளா் குமரேசன், இளைஞரணி மாவட்ட தலைவா் புங்கத்தூா் தேவா, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளா் வெங்கடேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, சுமித்ரா வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கோவா்த்தனம், பாஜக சாா்பில் மாவட்ட செயலாளா்பன்னீா்செல்வம், மாவட்ட துணைத்தலைவா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நிா்வாகிகள் சித்ராதேவி, உமா மகேஸ்வரி, பாமக சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி., மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், நிா்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.