மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புதன்கிழமை சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் வி. சோமசுந்தரம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புதன்கிழமை சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களான குளிா்சாதனப்பெட்டி, சிலிண்டா் மற்றும் மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை காட்சிப்படுத்தியபடி தெருத்தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பல இடங்களில் வேட்பாளருக்கு மகளிா் ஆரத்தி எடுத்தும், மலா்கள் தூவியும் வரவேற்றனா். வேட்பாளருடன் புலி ஆட்டம், கட்டைக் கூத்து,சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞா்களின் நடனங்கள், கோயில் அலங்காரக் குடைகள்,மங்கல மேள வாத்தியங்கள் ஆகியனவற்றுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா்.

அமைப்பு செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீா் செல்வம், மாநகர செயலாளா் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.