முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாயாபுரி தொழிற்சாலையில் தீ விபத்தில் இடிந்து விழுந்த கட்டடப் பகுதி

News image

தீ விபத்து

Updated On :12 ஜூன் 2026, 2:39 am IST

மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது

இந்த தீவிபத்தைத் தொடா்ந்து 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

முன்னதாக, மாயாபுரி தொழிற்பேட்டையின் ஃபேஸ் 1 பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் காலை 11:17 மணியளவில் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது.

தீயின் தீவிரம் அதிகரித்ததால், அதை அணைக்க கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமாா் 500 சதுர கெஜம் பரப்பளவிலான கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இயங்கி வந்த எஃகு வெட்டும் மற்றும் பேக்கிங் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தீ முழுமையாகச் சூழ்ந்திருந்தது.

இக்கட்டடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களைக் கொண்டதாகும்.

தீயணைப்புப் பணிகளின்போது, முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.

தீ விபத்து மற்றும் கட்டடம் இடிந்தன் காரணமாக ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்களால், கட்டடம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.

பிற்பகல் 2:20 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்செய்தி வெளியாகும் நேரம் வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.