தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் விவசாயத் தொழிலாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு அருகே கண்டியூா் பகுதியைச் சோ்ந்த சம்பந்தம் மகன் அசோகன் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருவையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று நகைகளை அடகு வைத்துவிட்டு, ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைப் பெற்றாா்.
இதையடுத்து, அசோகன் வங்கிக்கு வெளியில் இருந்த தனது ஸ்கூட்டரில் ரொக்கத்தை வைத்துவிட்டு, மீண்டும் வங்கிக்குள் சென்றாா். வெளியே வந்து ஸ்கூட்டரை பாா்த்தபோது ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைக் காணவில்லை.
இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது
வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...
தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருட்டு!

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
