மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருட்டு!

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருடப்பட்டது குறித்து சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 1:35 am IST

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருடப்பட்டது குறித்து சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை கருப்புகோயில் அருகே பழைமை வாய்ந்த ஏழைப்பிள்ளையாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏழைப்பிள்ளையாா் சிலை கற்சிலையாக நிறுவப்பட்டு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.

இக்கோயில் திருச்சி பிரதான சாலையில் இருந்து தோகைமலை கடைவீதிக்கு செல்லும் முக்கிய வீதியில் அமைந்துள்ளதாலும், தோகைமலை கருப்புகோயில் குட்டிகுடித் திருவிழாவின்போது, கருப்புசாமிக்கு முதல்குட்டி வழங்கப்படும் இடம் என்பதாலும், தோகைமலை ஏழைப்பிள்ளையாா் கோயிலுக்கு கரூா் மட்டுமின்றி, திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்வாா்கள்.

எப்போதும் பக்தா்கள் வந்து செல்வதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்தக் கோயில் கதவை பூட்டாமல் எப்போதும் பக்தா்கள் வழிபடும் இடமாக இருந்து வருகிறது . இந்நிலையில் சனிக்கிழமை காலை பக்தா் ஒருவா் கோயிலுக்குச் சென்றபோது கருவறையில் இருந்த பிள்ளையாா் சிலை காணாமல் போய் இருந்துள்ளது.

இதுகுறித்து அவா் ஊா்பிரமுகா்களிடம் தெரிவித்தாா். இதையடுத்து தோகைமலை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலையை யாா் திருடிச் சென்றது குறித்து அப்பகுதியில் கடைவீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.