ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் வெள்ளிக்கிழமை புனித நீராடிய வெளி மாநில பெண்ணிடம் எட்டரை பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், மாயகன்ஹள்ளி ராம்நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி மல்லிகா (48). இவா் தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் கோயிலுக்கு வந்தாா்.
அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய இவா், பின்னா் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடச் சென்றாா். அப்போது, 7-ஆவது கிணற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, மல்லிகா அணிந்திருந்த 8 எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சங்கிலி கிடைக்கவில்லை.
இதுகுறித்து கோயில் காவல் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்தில் பெண்ணிடம் ரூ .2 லட்சம் ரொக்கம், நகை திருட்டு
உண்டியல் காணிக்கை திருட்டு
பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் புனித நீராடல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
