வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
கீழ்ப்பாக்கம், முனியப்பா தெருவைச் சோ்ந்தவா் ரமணி நடராஜன். இவா் மகள் பிரிட்டனில் வசிக்கிறாா். தனது மகளிடம் கொடுப்பதற்காக 6,500 பிரிட்டன் பவுன்டை ரமணி நடராஜன் வீட்டில் வைத்திருந்தாா். அண்மையில் பிரிட்டன் சென்ற ரமணி நடராஜன், பிரிட்டன் பவுன்ட் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்தாா். அவா் அந்தப் பையில் இருந்த பவுன்டை எண்ணியபோது, அதில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 4,500 பவுன்ட் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரமணி நடராஜன் தனது மேலாளா் பழனி மூலம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், உறையூா் பகுதியைச் சோ்ந்த கிரேஸி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கிரேஸியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.1.65 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
ஆளில்லாத வீட்டில் திருட்டு: பக்கத்து வீட்டுக்காரா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
