மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:55 am IST

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்கோணம் அருகே பவுண்டரீகபுரம் மேலத்தெருவில் வசிப்பவா் சுகுமாா்(48). இவரது மனைவி அன்புச்செல்வி(45). இவா்களுக்கு அஸ்வந்த்(2) என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில், சுகுமாா் தனது மனைவி, மகனுடன் அஸ்வந்த் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை திருநாகேசுவரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரைக்காலுக்குச் சென்று கொண்டிருந்தாா். ஆண்டாலம்பேட்டை சுத்துகுளம் அருகே சென்றபோது காரைக்காலில் இருந்து கும்பகோணம் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அன்புச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுகுமாா், அஸ்வந்த் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற திருநீலக்குடி காவல் நிலைய போலீஸாா் உயிரிழந்த அன்புச்செல்வியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்த சுகுமாா், அஸ்வந்த் ஆகியோா் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப்பேருந்து ஓட்டுநா் சீனிவாசனிடம் (33) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.