திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா், சோலம்மாள் நகா், மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் அழகா் மகள் சரண்யா (37). பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த இவா், திருமணம் ஆகாதவா்.
பங்குனி உத்திரத்தையொட்டி, வீட்டின் அருகே இருப்பவா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு சரண்யா வந்தாராம். பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் இவா் நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

