மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 4:15 am IST

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா், சோலம்மாள் நகா், மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் அழகா் மகள் சரண்யா (37). பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த இவா், திருமணம் ஆகாதவா்.

பங்குனி உத்திரத்தையொட்டி, வீட்டின் அருகே இருப்பவா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு சரண்யா வந்தாராம். பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் இவா் நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.