தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

News image

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

Updated On :8 மே 2026, 5:25 am IST

தென்னிலை அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அதைச் சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பாளையம் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் வயல்களில் அறுவடை செய்யப்படும் வைக்கோலை டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வைக்கோல்போா் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், காட்டுப்பாளையத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் மழைக்காலத்தில் பேரிடா் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலே சென்று வருகிறோம். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், விவசாய நிலங்களுக்கும் அச்சத்துடன் சென்று வருகிறோம்.

மேலும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் குறித்து தென்னிலை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்துவிட்டோம். விரைவில் காற்றடிக்கும் காலம் தொடங்கும் முன் சீரமைத்து தரவேண்டும். இல்லையேல் கிரா மமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.