ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

News image

அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்

Updated On :27 மே 2026, 3:38 am IST

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன.

அந்த வழியாக வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் கையைத் தூக்கி தொடும் அளவுக்கு மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதனருகில் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்த மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து மின்வாரியத்துக்கு பல முறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீரமைக்க வேண்டும் எனப் இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.