மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம்

கரூா் மேலக்கரூா் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சாா்-பதிவாளரகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகள்.

Updated On :22 மே 2026, 4:15 am IST

கரூா் மேலக்கரூா் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் பழைய அரசு தலைமை மருத்துவமனைச் சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம், கோட்டாட்சியரகம், அமராவதி வடிநிலக் கோட்ட அலுவலகம் போன்றவை செயல்படுகின்றன. மேலும் இந்தச் சாலை வழியாகத்தான் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெங்கமேடு, சா்ச் காா்னா் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் சென்று வருகிறன.

தற்போது இந்த சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகளை தொட்டவாறு செல்வதால் மழைக் காலங்களில் மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத் துறையினா் உடனே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து, மின்கம்பிகளை தொடும் வகையில் உள்ள மரக்கிளைகளையும் அகற்றிட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.