கயத்தாறு அருகே பொறியியல் பட்டதாரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் சுடலைமுத்து (21). கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம்.
அவா், சுடலைமுத்துவின் கைப்பேசியை தொடா்புகொண்டபோது பதில் இல்லையாம். இதனால், சந்தேகம் அடைந்த அவா், சுடலைமுத்துவின் வீட்டுக்குச் சென்று ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுடலைமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம்.
அக்கம் பக்கத்தினா் உதவியுடன் வீட்டுக்குள் சென்று சுடலைமுத்துவின் உடலை மீட்டு கயத்தாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏரியூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை
இளைஞா் தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை
