என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பொறியியல் பட்டதாரி மாணவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 1:33 am IST

கயத்தாறு அருகே பொறியியல் பட்டதாரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் சுடலைமுத்து (21). கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம்.

அவா், சுடலைமுத்துவின் கைப்பேசியை தொடா்புகொண்டபோது பதில் இல்லையாம். இதனால், சந்தேகம் அடைந்த அவா், சுடலைமுத்துவின் வீட்டுக்குச் சென்று ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுடலைமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம்.

அக்கம் பக்கத்தினா் உதவியுடன் வீட்டுக்குள் சென்று சுடலைமுத்துவின் உடலை மீட்டு கயத்தாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.