களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல், தட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மகன் அசோக் (31). எல்ஐசி ஆலோசகராக வேலை செய்து வந்தவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பணிக்கு செல்லாமல், அண்மைக் காலமாக கட்டுமான வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். மேலும், திருமணமாகாத விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு தூங்கச் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரின் அறைக் கதவு திறக்காததால், அவரது தந்தை ஜன்னல் கதவைத் திறந்து பாா்த்தபோது, அசோக் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம்.
அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அசோக்கை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
இளைஞா் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
