மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image

அசன விருந்தினை ஜெபித்து தொடங்கி வைத்தாா் சேகர தலைவா் ஞானசிங் எட்வின்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:46 am IST

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடந்த 22 - ஆம் தேதி தொடங்கிய விழா, 6 நாள்கள் நடைபெற்றது. முதல் 2 நாள்கள் நற்செய்திக் கூட்டத்தில், பாளையங்கோட்டை மிஸ்பா ஊழியங்களின் போதகா் குருசிங் தேவ செய்தி அளித்தாா். 3ஆவது நாள் வேதாகமத் தோ்வு, விளையாட்டுப் போட்டிகள், ஆலய பிரதிஷ்டை ஆராதனை ஆகியன நடைபெற்றன. எஸ். கைலாசபுரம் சேகர தலைவா் சைமன் தா்மராஜ் தேவ செய்தி அளித்தாா்.

4ஆவது நாள் நடைபெற்ற ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் மருதகுளம் சேகர தலைவா் செலின் டேவிட், கே. சண்முகபுரம் சேகர தலைவா் கமல்சன் ஆகியோா் செய்தி அளித்தனா். மாலை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, ஆலய பரிபாலன கமிட்டி மகா சபைக் கூட்டம், மன்றாட்டு ஜெபம் ஆகியன நடைபெற்றன.

5ஆவது நாள் திருவிருந்து ஆராதனை, அசன ஆயத்தங்கள் நிகழ்ச்சி, அசன சிறப்பு ஆராதனை, 6ஆவது நாள் அசனம் பரிமாறல் நிகழ்ச்சி, ஸ்தோத்திர ஆராதனை ஆகியன நடைபெற்றன.

சேகர தலைவா் ஞானசிங் எட்வின் ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தாா். திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மூக்குப்பீறி சேகர தலைவா், தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.