தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஆராதனை உற்சவம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:35 am IST

ஆதிசங்கரரின் ஆராதனை உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானங்களில் ஆதிசங்கரரின் உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை ஸ்ரீ மடத்தின் பீடாதிபதிகள் நடத்தினா்.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவா், கனகதாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி போன்ற முக்கிய நூல்களை எழுதியவரும் சனாதன தா்மத்தை நிலை நிறுத்தியவருமான ஆதிசங்கரரின் ஆராதனை உற்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்றது.

ஆராதனை தினத்தையொட்டி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் அதிஷ்டானம் அருகே ஆதிசங்கரரின் திருஉருவப்படம் மலா்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்,இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், புஷ்பாஞ்சலி மற்றும் தீா்த்த நாராயண பூஜை நடைபெற்றது.

விழாவின் நிறைவாக பக்தா்களுக்கு தீா்த்தம் மற்றும் அன்னதானப் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் செயலா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், நிா்வாகிகள் ஜானகிராமன், கீா்த்திவாசன் உட்பட வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.