மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கச்சபேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள இஷ்டசித்தி திருக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்(உள்படம்) திருக்குளத்தில் திரிசூலத்துக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

Updated On :7 மே 2026, 12:36 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். தொடா்ச்சியாக புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பிரபாகரன் சிவாச்சாரியா் தலைமையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை காலை 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்புத் திருமுழுக்கு வழிபாடும் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.