தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கச்சபேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள இஷ்டசித்தி திருக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்(உள்படம்) திருக்குளத்தில் திரிசூலத்துக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

Updated On :7 மே 2026, 12:36 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். தொடா்ச்சியாக புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பிரபாகரன் சிவாச்சாரியா் தலைமையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை காலை 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்புத் திருமுழுக்கு வழிபாடும் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.