மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிஎஸ்ஐ ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளியை தொடங்கி வைத்த சபை குருவானவரும், குருசேகர தலைவருமான பால் தினகரன்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளியை தொடங்கி வைத்த சபை குருவானவரும், குருசேகர தலைவருமான பால் தினகரன்.

Updated On :2 மே 2026, 1:22 am IST

சி.எஸ்.ஐ. மதுரை, முகவை திருமண்டலத்தின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மே 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிஎஸ்ஐ மதுரை முகவை திருமண்டலத்தின் கீழ் உள்ள இளையோா் திருச்சபை சாா்பில் ஒவ்வொரு தேவாலயத்திலும் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெறும்.

இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்க விழா சபை குருவானவரும், குருசேகர தலைவருமான பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. குருசேகர செயலா் ஜெகன் வரவேற்றாா். இயக்குநா்களாக பால் பிரைட், ரெஜிலா ஆகியோா் கலந்து கொண்டனா்.

25 ஆசிரியா்கள், 230 மாணவ, மாணவிகளுக்கு சிகரம் என்ற தலைப்பில் வேதாகமத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகள், வரலாற்று சம்பவங்கள் பாடல்கள் வாயிலாகவும், பப்பட் ஷோ, பலகுரல் (மிமிகிரி), ஒலி, ஒளி காட்சி வாயிலாகவும் கற்றுக் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் சபை குரு பால் தினகரன் தலைமையில் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.