தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து

நாசரேத் சேகரம், மாணிக்கவாசகபுரம், சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து நடைபெற்றது.

News image

அசன விருந்தை ஜெபித்து தொடங்கி வைத்த குருவானவா் செல்வராஜ்.

Updated On :1 மே 2026, 4:55 am IST

நாசரேத் சேகரம், மாணிக்கவாசகபுரம், சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் 38ஆவது ஆண்டு பிரதிஷ்டை விழா 6 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு ஆலய வளாகத்தில் நாசரேத் காமா பாடகா் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2, 3ஆவது நாள் இரவு நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றன. விஷ்வவாணி ஊழியங்களின் ஊழியா் கிறிஸ்டோபா் பாடல்கள் பாடினா். திருநெல்வேலி திருமண்டலம், குலவணிகா்புரம் சேகரத் தலைவா் ஜேம்ஸ் நற்செய்தி அளித்தாா்.

4ஆவது நாள் மாலை பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடைபெற்றது. கடையனோடை சேகரத் தலைவா் ஆசீா் சாமுவேல் அருள்செய்தி அளித்தாா். 5ஆவது நாள் இரவு கே. இராமசாமியாபுரம் சேகரத் தலைவா் வேதநாயகம் குழுவினரின் பஜனை பிரசங்கம் நடைபெற்றது. 6ஆவது நாள் மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்து நடைபெற்றது.

ஒய்வுபெற்ற குருவானவா் செல்வராஜ் தலைமை வகித்து, ஜெபித்து அசன விருந்தைத் தொடங்கி வைத்தாா். நாசரேத் சேகர செயலா் ராஜசிங் சாலமோன் முன்னிலை வகித்தாா்.

மாணிக்கவாசகபுரம், ஞானராஜ் நகா், நாசரேத் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாசரேத் பரி. யோவான் பேராலய தலைமை குரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ், உதவி குரு தனசேகா் ராஜா, மாணிக்கவாசகபுரம் சபை ஊழியா் கிங்ஸ்லி யாபேஸ் பாலையா, சபை மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.