தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:40 am IST

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 53ஆவது தலமாகவும், நம்மாழ்வாரால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் 7ஆவது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப்பெற்றது இத்திருத்தலம். இங்கு, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி மாலை தாமிரவருணி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை வரை (ஏப். 28) யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், புதன்கிழமை காலை விஸ்வரூபம், சயன உத்தாபனம், நித்தியல் கோஷ்டி, யாகசாலை திருவாராதனம், ஹோமங்கள் அருளிச்செயல், மஹா பூா்ணாஹுதி, குமுதாதிபலி, துவார தோரண பலி சாதித்தல், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, ராஜகோபுரம், விமானம், கலச மூா்த்திகள், மூலவா், தாயாா்கள், துவார பாலகா்கள், ஆழ்வாா் ஆச்சாரியா்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. நான்குனேரி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.