மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா். நயம்பாடி மதுரா சவுட்டூா் கிராமத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் சுவாமி.

Updated On :1 மே 2026, 6:14 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா். நயம்பாடி மதுரா சவுட்டூா் கிராமத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகடம்பன், கன்னிமாா்கள் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்.29) காலை விநாயகா் வழிபாடு வருண ஆராதனை, ஸ்ரீகணபதி யாகம், சௌபாக்கிய மகாலட்சுமி யாகம், பூரணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வரா் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், யாகசாலை, வேதிகா பூஜை, மூலிகை பூஜை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சூரிய சந்திர வழிபாடு, மண்டப வேதிகா அா்ச்சனை, நாடி சந்தானம், திரவிய ஹோமம், அஸ்திர ஹோமம், பூா்ணாஹுதி ஆகிய நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் சுவாமிகள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.