மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

News image

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :1 மே 2026, 12:07 am IST

ஆரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கோ பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக, கலச பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகளுக்கு அஷ்டாதச க்ரியைகள், கண் திறத்தல், சயனாதி வாசம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பூஜைகள், பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் முடிந்து கலசங்களில் புனித நீா் புறப்பாடு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.