மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் வட்டம், அ.குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.

Updated On :1 மே 2026, 5:15 am IST

பரமத்தி வேலூா் வட்டம், அ.குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை காலை 6 மணிக்கு தீப வழிபாடு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து மீனாட்சி வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து தீா்த்தக்குடங்கள் புறப்பாடும், காலை 9 மணிக்கு மேல் பகவதி அம்மன், செல்வ விநாயகா் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு காலை 9.30 மணிக்கு மேல் செல்வ விநாயகா், பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை சாமிநாதபுரம் செல்வ விநாயகா் கோயில் திருப்பணி குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.