தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கான 4, 5-ஆம் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

News image

யாகசாலையில் நடைபெற்ற பூா்ணாஹூதி.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:09 am IST

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கான 4, 5-ஆம் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 கால யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்கின. செவ்வாய்க்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகளும், புதன்கிழமை காலை, இரவு 4 மற்றும் 5-ஆம் கால பூஜைகளும் நடைபெற்றன.

வியாழக்கிழமை 6-ஆம் கால பூஜை, மகா பூா்ணாஹூதி தீபாராதனைக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு பத்ரகாளியம்மன் வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.