மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :26 மார்ச் 2026, 2:13 am IST

பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பெருந்துறையில் வேதநாயகி அம்மன் உடனுறை சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு சோழீஸ்வரா், வேதநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், திரளாக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பெருந்துறையில் சென்னிமலை சாலை, கவின் நகா் உள்ள மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை முதல் 24 நாள்களுக்கு காலை 7 மணிக்கு மண்டல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.