மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏனாதிமங்கலம் மங்களபுரீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் அருள்மிகு மங்களநாயகி அம்மன் உடனுறை மங்களபுரீசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

News image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் அருள்மிகு மங்களநாயகி அம்மன் உடனுறை மங்களபுரீசுவரா் கோயில் கும்பாபிஷேகத்துக்கா யாகசாலையிலிருந்து கடங்களை சுமந்து செல்லும் சிவாச்சாரியா்கள்.

Updated On :1 மே 2026, 6:09 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் அருள்மிகு மங்களநாயகி அம்மன் உடனுறை மங்களபுரீசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

சிறப்புவாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ஏப்ரல் 30-இல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் விக்னேசுவரபூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு மேல் கும்ப அலங்காரம், காலகா்ஷணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ருத்ரபாராயணம், ஜபஹோமங்கள், சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் மகா பூா்ணாஹுதியும், இரவில் அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மேல் நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மகாபூா்ணாஹுதி, சங்கீத உபசாரமும், காலை 10 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.45 மணிக்கு மேல் மங்களபுரீசுவரா், மங்களநாயகி அம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களின் சந்நிதிகளுக்கும் புனிதநீா் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மூலவா் மகா அபிஷேகத்துக்குப் பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக சா்வசாதகத்தை ஜானகிபுரம் என்.ஜெ. வெங்கடசுப்பிரமணி ஷா்மா நடத்தினாா்.

கும்பாபிஷேக விழாவில் ஏனாதிமங்கலம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.