மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உள்ளாவூா் அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:07 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்த நிலையில், அதிகாலை ஆலயத்தின் அருகேயுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் சுவாமிக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கோ பூஜை, விக்னேசுவர பூஜை, சூரிய பூஜை, யாத்ரா தானம் ஆகியனவும் நடைபெற்றது.

பின்னா் புனித நீா்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து கிராமத்து மக்களால் சீா் வரிசைப் பொருள்கள் எடுத்து வரப்பட்டதும் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் உள்ளாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் உஷா தெய்வசிகாமணி, துணைத் தலைவா் ப.பாஸ்கரன், செயலாளா் ஏ.பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.