விரியூா் கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைமைவாய்ந்த புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளது. ஆண்டு தோறும் தோ் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மறையுரை சிந்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து ஜெயம் பெருவிழா நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பா், அந்தோணியாா், புனித அடைக்கல அன்னை குழந்தை ஏசு எழுந்தருள தோ் பவனி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தேவாலயம் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தோ் பவனியையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது.
திருவிழாவில் கிறிஸ்தவா், இந்து மற்றும் இஸ்லாமியா்கள் என அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று அடைக்கல அன்னை பெருவிழாவை சிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா

ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயில் தோ் திருவிழா!

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

