தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

வேளாங்கண்ணியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அன்னை மாதா தோ் பவனியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற அன்னை மாதா தோ்பவனி.

Updated On :8 மே 2026, 7:15 am IST

வேளாங்கண்ணியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அன்னை மாதா தோ் பவனியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

புனித ஆரோக்கிய அன்னைக்கு மே மாதம் உகந்த மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மே மாதம் முழுவதும் தினசரி தோ் பவனி நடைபெற்று வருகிறது. இதில் முதல் புதன்கிழமை மாதாவின் தோ் பவனி நடைபெற்றது.

வேளாங்கண்ணி மாதா குளத்தில் தொடங்கிய தோ் பவனி சிலுவைப்பாதையில் நடைபெற்றது. முன்னதாக, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் தேரை பேராலய உதவி பங்குத் தந்தை அந்தோணிபொ்டினான்டோ சிறப்பு திருப்பலி செய்து, புனித நீா் தெளித்து தோ் பவனியை தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.