மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:15 am IST

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன்   தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், குதிரை, சிம்மம் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டில் உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நிலைக்கு வந்தபிறகு பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா். பின்னா் கிடாவெட்டும், அம்மன் தடம்பாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.

விழாவில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த   திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுபெற்றது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் இந்துசமய அறநிலையத்துறையினரும் ஆதனக்கோட்டை கிராம மக்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.