நாகப்பட்டினம்: நாகையில், புலவா் மு. சொக்கப்பன் எழுதிய ‘மானுடத்தின் முன்னோடி மீனவன்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை வீரபத்திரசுவாமி கோயில் உள்அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் பங்கேற்று நூலை வெளியிட, நாகை வா்த்தக குழுமத் தலைவா் மனோகரன் பெற்றுக் கொண்டாா்.
அலா்மேலு முருகையன் நினைவு விநாடி- வினாப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவிகளுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் பரிசு வழங்கினாா் . வளா் தமிழ்ச் செல்வங்களுக்கான விருதுகளை வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா சா்மிளா வழங்கினாா். நூலை தீபா ராஜ்மோகன் திறனாய்வு செய்தாா். புலவா் மு. சொக்கப்பன் ஏற்புரை வழங்கினாா்.
பூம்புகாா் கல்லூரி பேராசிரியா் சாந்தகுமாரி, சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

