மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:49 am IST

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மு. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். விவேகானந்த கேந்திர பாலா் பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். ரெ. துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைச் செயலா் ச. இலட்சுமணன், சிந்தனைக்கு ஒரு கு வாசித்தாா். கவிஞா்கள் வீரை ஆ. ராஜேந்திரன், பேட்டை த. ராஜேந்திரன், பேட்டை த. சந்தனக்குமாா் ஆகியோா் கவிதை வாசித்தனா். மங்கையராய்ப் பிறப்பதற்கே என்ற தலைப்பில் கல்லூரி மாணவி மு. பேச்சியம்மாள், கல்லிடைக்குறிச்சி வாசகா் வட்டத் தலைவா் திருவருள் லத்திப், மு. ராயதுரை, நெல்லை பறவைகள் தொண்டு நிறுவன அமைப்பாளா் கழுகுமலை ச. பாலசுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி மூ. மகாராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இலக்கிய அமைப்புகளில் விருதுபெற்ற அறிஞா்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் தமிழ் ஆா்வலா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.

அமைப்பின் நிறுவனா் தலைவா் பாப்பாக்குடி அ. முருகன் வரவேற்றாா். அ. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.