தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பொய்த்து போனது சீா்காழி ‘சென்டிமென்ட்’

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

News image
Updated On :6 மே 2026, 3:05 am IST

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

சீா்காழி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த கால தோ்தல்கள் மூலம் நிரூபணமாகி வந்தது.

சீா்காழி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தோ்தலில் சீா்காழி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஆா். செந்தில்செல்வன் 71, 449 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளா் ம. சக்தியை விட 11, 417 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். ஆனால், அவா் சாா்ந்த கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. தமிழகம் முழுவதும் வீசிய தவெக அலையில் சீா்காழி சென்டிமென்ட்டை பொய்த்து போக செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.