ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சாா் பதிவாளா் சீனிபாண்டியன் தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி ரூ.66,250-யை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பணத்தைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக நகா்மன்ற உறுப்பினரிடம் ரூ.38 ஆயிரம் பறிமுதல்

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

