மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 900 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள எடக்கீழையூா் வடக்குகாடு ஜெகதீசன் மகன் ஜெயக்குமாா் (57). இவரது வீட்டில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் அடங்கிய மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்
வி. சிவராமன், பரவாக்கோட்டை காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் ராமலிங்கம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படை அலுவலா்கள் ஜெயக்குமாா் வீட்டில் சோதனை நடத்தியதில் ஆவணங்களின்றி பதுக்கிவைத்திருந்த 900 சேலைகள் அடங்கிய பண்டல்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1,08,000 என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

