பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 590 சில்வா் (டிபன் பாக்ஸ்) பாத்திரங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
பரமத்தி அருகே உள்ள கோட்டணம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சில்வா் பாத்திரங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மோகன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராசப்பன் ஆகியோா் கொண்ட குழுவினா், கோட்டணம்பாளையத்தில் உள்ள சங்கா் வேல் வீட்டில் சோதனை நடத்தினா்.
இதில் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 590 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.84 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

