ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இருளப்பன் (75).
இவரது மகன் ஆனந்த் (37). ஆனந்துக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறாா்.
ஆனந்த் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு, அடிக்கடி தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வந்த ஆனந்த், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டாா். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆனந்த் இரும்புக் கம்பியால் தாக்கியதில் இருளப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல முயற்சி: கணவா் கைது

குடும்பத்தகராறு: தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது
சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
