கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன் (எ) ராஜேந்திரன்(55), மீன் வியாபாரி. இவரது மனைவி ருக்குமணி. தம்பதியருக்கு அய்யப்பன்(32), பூவரசு, ரோஜா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனராம். இவா்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் வியாபாரம் முடிந்து வீட்டில் இருந்த சடையன் (எ) ராஜேந்திரனும், அவரது மகன் அய்யப்பனும் மது அருந்தினராம். அப்போது அவா்களிடையே இடப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தனது தந்தை சடையன் (எ) ராஜேந்திரனை மீன் வெட்டும் கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அய்யப்பனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை
மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது

கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

