கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் ஊராட்சி, பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (41). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதா (38). இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 17 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனா்.
தங்கராஜ், அமுதா ஆகிய இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தங்கராஜ் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் வந்து மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல புதன்கிழமை குடித்து விட்டு மனைவி அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் வீட்டில் படுத்து இருந்துள்ளாா். அப்போது அமுதாவும் குடிபோதையில் இருந்தததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த அமுதா குடிபோதையில், படுத்திருந்த கணவா் தங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.
இது குறித்து தகவலறிந்த கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தங்கராஜின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போதையில் இருந்த அமுதாவைப் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி அமுதா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

கட்டடத் தொழிலாளி கொலை

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது
கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

