பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கட்டடத் தொழிலாளி கொலை

திருச்செந்தூா் அருகே குடிபோதையில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 மே 2026, 6:33 am IST

திருச்செந்தூா் அருகே குடிபோதையில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (50). இவருடன் பிட்டா், மற்றொருவா் என 3 போ் வீரபாண்டியன்பட்டணம், பாக்யா நகரில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு சுனில்குமாரும், பீட்டரும் சோ்ந்து மது அருந்தினராம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் பீட்டா் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுனில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த பீட்டா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து தகவலறிந்ததும் தாலுகா போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தது, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.