நாசரேத் காவல் நிலையம் அருகே மதுபோதையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொன்ற அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாஸ்கரும் (37) நண்பா்கள். இருவரும் கட்டடத் தொழிலாளி. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், நாசரேத் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பாஸ்கா் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினாா். தலையில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், போலீஸாா் நிகழ்விடம் சென்று ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமயம் அருகே மதுபோதையில் திருநங்கை கொலை: நீதிமன்றத்தில் 2 போ் சரண்; ஒருவா் தலைமறைவு

திருப்பத்தூா் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

கட்டடத் தொழிலாளி கொலை
மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

