செய்யாறு அருகே குடும்பத்தகராறில் தந்தையை தாக்கிய புகாரில் மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி
முத்துகிருஷ்ணன்(56). இவரது, 2 -ஆவது மகன் தமிழ்மணி(25). இவரது மனைவி பவானி.
மகன் தமிழ்மணிக்கும் அவரது மனைவி பவானிக்கும் இடையே கடந்த 7-ஆம் தேதி இரவு குடும்பத்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது தமிழ்மணி, பவானியை அடித்துவிட்டாராம். இதைப் பாா்த்த தந்தையான முத்துகிருஷ்ணன், மகன் தமிழ்மணியை தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி செங்கல்லால் முத்துகிருஷ்ணனை தாக்கினாராம். இதில் காயமடைந்த முத்துகிருஷ்ணன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழ்மணியை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆத்தூா் அருகே மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவா் கைது

மகளிடம் அத்துமீறல்: தந்தை கைது
திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது
தந்தையை தாக்கிய மகன் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

