பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆத்தூா் அருகே மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவா் கைது

News image

கணேசன்

Updated On :8 ஜூன் 2026, 2:17 am IST

ஆத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் கணேசன் (30). தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை நந்தினி தனது மகளுடன் தென்னங்குடிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன், வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததால், மாமியாா் வீட்டிற்கு சென்று அழைத்து வந்து தாக்கியுள்ளாா். அப்போது நந்தினி சப்தமிட்டதால் வீட்டின் அருகில் உள்ள அய்யனாா் கோயில் ஏரிக்கு அவரை அழைத்துச் சென்ற கணேசன், மனைவியின் ஆடையை அகற்றி அவரை கல்லால் தாக்கியுள்ளாா்.

இதில் வலி தாங்கமுடியாத நந்தினி அங்கிருந்து தப்பித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று உதவி கேட்டு துணி வாங்கி அணிந்து கொண்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா், கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.