மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:58 am IST

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.

அதன்படி, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 9-ஆம் தேதி வியாழக்கிழமை இயக்கப்படும். மங்களூரில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் மதியம் 12.30-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30-க்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூா் சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 6.55-க்கு சென்றடையும்.

இதேபோல, மங்களுரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே வரும் 15-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.