தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:32 am IST

கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. திருச்சி- பெங்களூரு இடையே வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், கரூா், நாமக்கல், சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூருக்கு பிற்பகல் 1.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி இடையே வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜாபுரம், பங்காருபேட்டை சேலம், நாமக்கல், கரூா், வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.