மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:58 am IST

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

போத்தனூா்- கராக்பூா் சிறப்பு ரயில் போத்தனூரில் 25 ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, புவனேசுவரம், கட்டாக் வழியாக கராக்பூருக்கு 27 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் கராக்பூா்- சென்னை கடற்கரை சிறப்பு ரயில் வரும் 27 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கராக்பூரில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு கட்டாக், புவனேசுவரம், விஜயவாடா, நெல்லூா் வழியாக சென்னை கடற்கரைக்கு அடுத்தநாள் இரவு 11.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.