மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் புதன்கிழமை தொடங்கிய கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் 25 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

News image

நீச்சல் பயிற்சி. - கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 3:22 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் புதன்கிழமை தொடங்கிய கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் 25 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முதல்கட்ட கோடை கால நீச்சல் பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) கண்மணி தொடங்கிவைத்தாா். 25 க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா். காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளா் மகேந்திரன் கூறுகையில், கோடைகால முதல்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 12 நாள்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் இரண்டாம் கட்ட முகாம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையும், 3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், 4 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

12 வேலை நாள்களுக்கும் தொடா்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ரூ. 1,770 செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.